எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

பல அனுபவங்களை தந்த எமது பயணம்

     எதிர்கால தலைவர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக பாடசாலைகளுக்கான பயணத்தினை மேட்கொள்வதட்கு Sri Lanka Unites   தீர்மானித்தது இதன் நோக்கம் இலங்கை பூராகவும் உள்ள மாணவர்களிடம் இந்த சமாதனத்திட்கும் நல்லினக்கத்திட்குமான செய்தியை இட்டு செல்வதாகும்.


முதலில் மேல்மாகாணத்தில் ஆரம்பமான எமது பயணம் இதில் பலபாடசாலைகளுக்கு சென்றிருந்தோம். முன்னைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல் மேல்மாகாண பயணம் சற்று கடுமையாகவே அமைந்திருந்தது அத்துடன் கொழும்பில் இருந்த ஆரம்ப நாட்களில் எங்களுக்கு பல பயிற்சிகள் வழங்கப்பட்டது இதன் மூலம் எங்களது அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றில் மற்றம் ஏற்பட்டதுடன் எங்களது பேச்சாற்றல் தலைமைத்துவம் மற்றும் சமூக இணக்கம் ஆகியவற்றை வளர்த்து கொள்ளக்கூடியதாக அமைந்தது.
அதனை தொடர்ந்து இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் பயணம் செய்தோம் அங்கு பல்வேறு விதமான மாணவர்களையும் சந்தித்து அவர்களிடம் உரையாற்றினோம். இந்த  உரையில் இலங்கையின் 15 மாவட்டங்களை சேர்ந்த
தலைவர்களாகிய நாங்களே சமாதனத்தினையும் நல்லினக்கதினையும் பற்றி விளக்கம் அளித்தோம் நாங்கள் பல்வேறு இனங்களையும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணப்பட்டோம் அதனால் எங்களது கருத்துக்களை எளிதாக அந்த மாணவர்களிடம் கொண்டுசேர்க்க முடிந்தது. அத்துடன் அவர்களிடம் இருந்து சிறந்த பின்னூட்டளினயும் பெறக்கூடியதாக இருந்தது. எமது இந்த பயணமானது 36 நாட்கள் தொடர்ந்தது. அதில் 3000 கிலோமீட்டர்களை கடந்து 25 மாவட்டங்களிலும் உள்ள 100 க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கும் சென்றிருந்தோம், அது 75 ஒன்றுகூடல்களையும்  பல செயத்திட்டங்கலையும் உள்ளடக்கியதாக காணப்பட்டது அத்துடன் இந்த பயணத்தில்  இலங்கையின் 15   மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 25 மாணவத்தலைவர்கள் அங்கம் வகித்தனர். அடுத்தபடியாக இந்த பயன்த்திநூடாக Sri Lanka Unites இன் எதிகால திட்டங்களை விளக்கியதுடன் நல்லினக்கத்திட்காக பாடசாலைகளை இணைத்து எதிர்காலத்திட்கான செயற்பாடுகளை மேற்கொள்ள அவர்களுக்கு தூண்டுதல்களையும் வழக்கிணோம். இந்த பயணமானது சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக இளம் சந்ததியினர் மனதில் வித்திடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.