![]() |
1வது நாள்
அன்று திங்கட்கிழமை அக்டோபர் முதலாம் தேதி 2012 பல கனவுகளுடன் எங்களது கனவு அணி 2012 தங்களது பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருந்தது.
இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் இருந்து இவ்வருடம் உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்கள் இந்த கனவு அணியில் இணைத்து கொள்ளப்பட்டனர்.
அறியாத முகங்கள் தெரியாத நபர்களுடன் இணைத்து எமது பயணத்தை ஆரம்பித்தோம்.
முதலில் உயர்ஸ்தானிகர் ஜயந்த தனபால அவர்களுடன் 2012 கனவு அணியின் அங்கத்தவர்கள் ஒரு கலந்துரையாடலின் ஈடுபட்டார்கள்.அது மட்டும் இன்றி அன்று காலை U.N.P கட்சியின் உறுப்பினரான திரு.எரான் விக்ரமரத்ன வை சந்தித்தோம்.
பின் மாலை நேரத்தில் திரு. ராஜீவ் விஜெயசிங்க்ஹா யை சந்தித்தோம்.இதுதான் எங்கள் பயணத்தின் முதலாவது நாள்.
எங்கள் இரவை நாம் உவெஸ்லி கலூரியில் கழித்தோம்.
2வது நாள்
எமது இரண்டவது நாள் கொழும்பில் இருந்து கம்பஹா மாவட்டதை நோக்கி பயணத்தை ஆரம்பித்தோம்.
றாகம பசிலிக்கா கல்லூரியில் எமது முதலாவது பயிற்சியை மிகவும் சிறப்பாக செய்து முடித்தோம் .
அதை தோடர்ந்து நாம் மொனறாகலையை நோக்கி பயணம்செய்ய தொடங்கினோம்.
அன்று இரவு நாம் மொனராகலையில் உள்ள பிக் விஎவ் ஹோடெல்லில் தங்கினோம்
3வது நாள்
ரத்னபுரியில் உள்ள தர்மபால மகாவித்யாலயத்தில் எமது ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் காலை கூட்டம் நடைபெற்றது.
பின் நாம் அப்பாடசாலையில் உள்ள
மாற்று திறநாளிகளுடன் எமது நேரத்தை கழிதோம்
இதன் பின் நாம் மோனரகலையை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிதோம்.
இரவு 9.30 க்கு மோனரகலையை சென்றடைந்தோம்.
அன்று இரவு நாம் படிக்கவேண்டிய பாடத்தை படித்தபின் அடுத்த நாளின் செயற்பாட்டை திட்டமிட்டோம்.
4வது நாள்
நான்காவது நாள் எமது பயணத்தில் மறக்கமுடியாத நாள்.
ஏனெனில் அன்று இரண்டு பயிற்சிகள் நடைபெற்றது, அதுவும் இரு வேறு இடங்களில்.
நாம் காலையில் மொனராகலை ராஜகீய மகாவித்யலயத்தில் முதலாவது பயிற்சியை தொடங்கினோம்.
இரண்டவது பயிற்சி அக்கறைப்பற்றில் உள்ள அக்கறைப்பற்று சென்ட்ரல் கல்லூரியில் நடைபெற்றது.
இங்குதான் ஹக்கானியும் பிஷாமும் எம்முடன் எனது பயணத்தில் இணைத்தனர்
அது மட்டுமன்றி 2011 கனவுக்குழுவின் உறுபினர்களான அர்சத்தும் அச்பாக்கும் எம்முடன் இணைந்தனர்.
அன்றிரவு எமது இராபோஜனம் இஸ்லாமிய முறைபடி சவானில் சாப்பிட்டோம்.
5வது நாள்
ஐந்தாவது நாள் எமக்கு ஒரு ஒய்வு நாளாக இருந்தது.ஒய்வுநாளாக இருந்தாலும் நாம் எமது பிரயாணத்தை திருகோமலையை நோக்கி ஆரம்பித்தோம்.

திரிகோணமலைக்கு செல்லும்வழியில் நாம் பாசிகுடா கடற்கரைக்கு சென்றோம்.
அங்கு நாம் அனைவரும் காற்பந்து விளையாடியபின் நீராடசென்றோம்.


பின் இரவு நாம் உணவு அருந்தும்போது அர்ச்சதின் பிறந்தநாளை கொண்டாடினோம். அத்துடன் நாங்கள் எமது இரவை இருக்கங்கண்டியில் கழித்தோம்
6வது நாள்
ஆறாவது நாள் எமது பயிற்சி திருகோணமலை மெதடிஸ் கல்லூரியில் நடந்தது.
இது ஒரே நாளில் ஒழுங்குசெய்யப்பட்டது. 2012 கனவுக்குழுவின் உறுப்பினரான சாயின், மாமி தான் இக்கல்லூரியின் அதிபர்
இதனால்தான் நாம் திருகோணமலையில் திடீரென்று ஒரு பயிற்சியை நடத்தினோம்.ஏனெனில் எமது பயிற்சி பட்டியலில் திருகோணமலை மாவட்டம் இருக்கவில்லை.
இதன் பின் நாம் யாழ்பாணத்தை நோக்கி பயணம் செய்யும்
வழியில் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறை படித்தோம் .