எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

முல்லைத்தீவு நல்லிணக்க மையமும் தொழில் பயிற்சிகளும்


யுத்தத்தின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய முல்லைத்தீவு மக்களுடைய மனதில் அவர்களது எதிர்காலத்தை குறித்து  பல்வேறு கேள்விகள். சொந்த இடத்திற்கு திரும்பிய திருப்தி இவர்களிடம் காணப்படுகின்ற போதிலும், மீள்குடியேற்றப்பட்டு 3 வருடங்கள் கழிந்த நிலையில் வாழ்கையில் முன்னேற்றங்கள் இல்லையே என்ற ஏக்கமும் இவர்களிடம்  காணப்படுகின்றது. முக்கியமாக உயர் தரக் கல்வியை முடித்தவர்கள், பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டவர்கள்  அடுத்ததாக என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ஏனெனின் உயர் தரத்தில் சித்தியடைந்து சிலர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்கின்றனர்.  வசதியுடைய சிலர் நகர்ப்புறங்களிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்வதோடு ஏனையோர் தொழில் வாய்ப்புக்களை தேடிச் செல்கின்றனர். மிகவும் குறைந்த வாய்ப்புகள் மற்றும் வளங்களின் காரணமாகவே இந்நிலை அங்கு நிலவுகின்றது. இந்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி  முல்லைத்தீவு இளைஞர், யுவதிகளுக்கு ஒரு  சிறப்பான எதிர்காலத்தை அமைத்துகொடுப்பதை நோக்காகக் கொண்டு, இவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்காக, ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் நல்லிணக்க மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் நல்லிணக்க மையமானது கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளை எனும் இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்  நல்லிணக்க மையத்தினூடாக தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழி, வர்த்தக முயற்சியாண்மை போன்றவற்றில் மாணவர்கள் தமது திறன்களை விருத்திசெய்வதற்கான பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலவசமாக வழங்கப்படும் இவ் பயிற்சி நெறிகள் ஊடாக மாணவர்கள் முழுமையான பயனை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை கருத்திற் கொண்டு கணணி, இன்டர்நெட் போன்ற பல வசதிகள் இங்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் இம் முயற்சியானது நவீன காலகட்டதிற்கு ஏற்ப புதிய தொழில் முறைகளை முல்லைத்தீவு மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவது மாத்திரமின்றி இதனூடாக புதிய தொழில் வாய்ப்புக்கைளை இம்மக்கள் பெற்றுக்கொள்வதட்கும் இது வழிவகுக்கின்றது. 
      

Leave a Reply