எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

ஓன்று கூடும் இலங்கை அமைப்பின் அணியினருக்கான மீள் சந்திப்பு 2013


பாரிய கடப்பாடுகளுக்கும் வேலைத்திட்டங்களுக்கும் மத்தியில் ஓன்று கூடும் இலங்கை அமைப்பின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான அணியினருக்கான மீள் சந்திப்பு 2013 அண்மையில் புத்தளம் மாவட்டத்தில்  மாதம்பே "அபே கடெள்ள" யில்  இடம்பெற்றது இதில் எமது அமைப்பின் உட்கட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பாகவும் ஓன்று கூடும் இலங்கை அமைப்பின் பிரதான இலக்குகளை அடைவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பிரதானமாக கலந்தாலோசிக்கப்பட்டது. 

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாவது நாளில்  அணி அங்கத்தவர்கள் தங்களது வேலைகளின் அடிப்படையில் தங்களுக்கு உரித்தான துறைகளுக்கு நியமிக்கப்பட்டனர் அத்துடன் அன்றைய தினம் எமது அணி அங்கத்தவரான விந்தியா பீரிஸ் பிறந்ததினமாகையால் அவரை வாழ்த்தி பரிசுகளும் வழங்கப்பட்டது . இரண்டாவது நாளில் முதலாவதாக அணியினை கட்டியெலுப்புவதட்கான விளையாட்டுக்கள் இடம்பெற்றன இதனூடாக புதிய அங்கத்தவர்களுடனான பரஸ்பர அறிமுகம் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து  திட்டமிடல் அமர்வு இடம்பெற்றது இதில் எதிர்காலத்தில் நடத்தப்பட இருக்கும் வேலைத்திட்டங்கள் பற்றியும் நிகழ்ச்சிகள்பற்றியும் திட்டங்கள் முன்வேய்க்கப்பட்டது அடுத்ததாக ஓன்று கூடும் இலங்கையின் அமைப்பு வட்டம் விபரிக்கப்பட்டதுடன் இலக்குகள் பற்றிய புள்ளிவிவரங்களும் ஆராயப்பட்டன. அதனையடுத்து துறைகளை உருவாக்குதலும் வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது மேலும் துறைகளுக்கு தமக்கான கடமைகளும் விளக்கப்பட்டன அத்துடன் ஒவ்வொரு துறையினரும் தமக்கே உரித்தான சுய இலக்குகளை வகுத்துக்கொண்டனர். அன்றையதினம்  மாலைவேளையில்  சிறுவர் இல்ல சிறார்களுடன் தங்களது நேரத்தை செலவிடமுடிந்தது. அதன்பின்னர்  ஒவ்வொரு துறையினரும் தாங்கள்  தயார்செய்த தங்களது அணி பற்றிய விளக்கத்தினை அனைவருக்கும் வழங்கினர். அத்துடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன மூன்றாவது நாளில் பிரதானமாக ஒவ்வொரு துறையினரும் தாங்கள் ஈடுபடும் வெளித்திட்டம் பற்றிய மாதாந்த அறிக்கையினை சமர்பிக்கவேண்டியது பற்றி வலியுறுத்தப்பட்டது இந்நிகழ்வின்மூலம் ஓன்று கூடும் இலங்கை அமைப்பிற்கு புதிய ஊக்கமும் உத்வேகமும் அழிக்கப்பட்டுள்ளதுடன் துரிதசெயற்பாடுகளுக்கான வழிகாட்லகளும் வழங்கப்பட்டுள்ளன இதன் மூலம் தற்போது காணப்படும் துறைகள் பின்வருமாறு 
  1.  நல்லிணக்க நிலையத்துறை
  2. மக்கள் தொடர்பு  துறை 
  3. சஹாசார இதழ் துறை
  4. நிர்வாக துறை
  5. பாடசாலைகள் தொடர்பு துறை
  6. பிராந்திய பிரதிநிதிகள் துறை
  7. எதிர்கால தலைவர்கள் மாநாட்டு துறை
  8. SHOW YOU CARE  (பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கான) துறை என்பனவாகும்.

Leave a Reply