எமது பயணத்தில் எம்மோடு இணையுங்கள்

அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தில் தங்கயுள்ளது. நாம் இளைஞர்கள் நமது நாட்டின் எதிர்காலம் எமது கைகளில் உள்ளது. எமது நாட்டில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்காக எமது பங்களிப்பையும் வழங்குவோம்

கேகாலையில் எனது அனுபவம்



காலையில் கண்டியில் இருந்து கேகாலைக்கு சென்றேன். அதனை தொடர்ந்து கேகாலையில் எங்கள் கூட்டங்கள் தொடங்கியது. முதலில் நாம் Kegalle Balika Vidyalaya , Duddly Senanayaka College , Kegalle Maha Vidyala போன்ற பாடசாலைகளுக்கு சென்றோம். பாடசாலைகளுக்கு செல்வது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் அங்கு சிங்கள, புத்தமத பாரம்பரிய விஷயங்களை பார்த்தேன்.


கேகாலை மகா வித்யாலயம் குறிப்பாக ஒரு மறக்க முடியாத அனுபவம், நான் அந்த பள்ளியில் இருந்து ஒரு பையனை சந்தித்தேன். அவரது பெயர் Sanjaya ஆகும். அவர் எதிர்கால தலைவர்கள் மாநாடு - 03 இல் பங்கேற்றார். அவரது தந்தை இலங்கை இராணுவத்தின் ஒரு சிப்பாய் ஆகும், மற்றும் அவர் போரில் அவரது கையை இழந்தவர். அதனால் அவர் தமிழ் மக்களை வெறுத்தார் ஆனால் மாநாட்டிற்கு பிறகு அவருக்கு இரண்டு தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர். அவரை சந்தித்து ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

மாலையில் நாம் Pinnawela யானைகளின் சரணாலயதிற்கு சென்றோம். இரவில் நாம் SANASA வுக்கு சொந்தமான ஒரு Buddhhist இடத்தில் தங்கியிருந்தோம். எமது நண்பர்கள் மஞ்சுலவும் திசரவும் இதை நன்றாக ஏற்பாடு செய்திருந்தனர். அடுத்த நாள் நாங்கள் Kegalle Balika வித்யாலயதில் ஒரு செயலமர்வினை நடத்தினோம். அத்துடன் நாம் கேகாலையில் எங்கள் நடவடிக்கைகளை முடித்தோம்.

கேகாலை ஒரு அழகான இடத்தில் இருந்தது. அது ஒரு அற்புதமான புவியியல் இயற்கையை கொண்டிருக்கிறது. அதன் காலநிலை சிறப்பானதாக இருந்தது ...


நான், கேகாலை... என் நினைவுகளை மறக்க முடியாது.


நன்றி!
ஆக்கம் - Sanjeevan Marine
மொழி மாற்றம் - Arzath Areeff

Leave a Reply